Monday, 5 August 2013

இன்று காலையிலிருந்து மாலை பள்ளி முடியும் நேரம் வரை சரியான வேலை. ..

கல்வித்துறையிலிருந்து  மெயில் மூலம்  வந்திருந்த அனைத்து கடிதங்களுக்கும் பதில் எழுதி அனுப்பி , இ டையிடையே எனது  வகுப்புகளுக்கும் சென்று வந்துக் கொண்டிருந்ததால் நேரம் அதிகம் தேவைப் பட்டது இன்றைக்கு.......

பள்ளி மேற்பார்வைக்கு நேரம் கிடைக்கவில்லை .......

எல்லா   அலுவல்களையும் முடித்து விட்டு நான் மதிய உணவு உண்ண உட்கார்ந்த நேரம் மாலை மணி நான்கு.......

இன்றைய வேலைகளை முடித்த திருப்தியை மீறி எனக்கு மனசும் உடம்பும் களைப்பாய்  உணர்ந்தேன் ......

kg குழந்தைகளுக்கு   பள்ளி முடிந்து வீடு நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர்.

மிக மகிழ்ச்சியோடு வீட்டிற்கு ஓடும் குழந்தைகள் என்றைக்கு அதே மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வருகின்றனவோ அன்றைக்கு தான் கல்வியும் பள்ளிகளும் வெற்றி பெறும் ........

யோசித்துக் கொண்டே சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன் ....

என் அறை  மெல்லத் திறந்தது ............ஆயாவிடம் யாரையும் என்னைப் பார்க்க அரை மணி நேரம் அனுப்ப வேண்டாம் என்றேனே!

கதவை திறக்க கஷ்ட படுவது தெரிந்தது ......

எழுந்துப்   போய் திறந்தேன்......ஒரு வாண்டு... தன்  புத்தகப்பையை முதுகிலும், லஞ்சு  கூடையை கையிலும் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு நின்றிருந்தான் .........'.என்ன நல்லா கதவை திறங்க', என்றபடி ..

என்னமா அம்மா வரலையா ? வீட்டிற்கு போகலாம் இரு இப்போ அம்மா  வந்திடுவாங்க '  என்றேன்...

அவன் பின்னால் அவனின் அம்மா.....கேள்வியாய் பார்த்தேன் ........

என்ன உங்களை காலைலேர்ந்து  காணோம் ?  ஏன் என்னை பார்க்க வரலை ?உங்களை தேடினேன்...; என்றான்.
      
மேடம் இப்போ தான் சாப்பிடுறாங்க அதான் அவங்களை  பார்த்திட்டோம் இல்லே நாளைக்கு வரலாம் வா.' என்று அவன் கையை இழுத்தபடி அவனின் அம்மா
.' சாரி  மேடம், இவன்   உங்களை பார்க்காமல் விட்டிற்கு வரமாட்டேன்  என்றான் அதான்...' என்றபடியே சென்றார் . ....

என்   களைப்பெல்லாம் ஓடிப் போன இடம் தெரியவில்லை.......  
       

No comments:

Post a Comment